திருவள்ளூர், நவ 30- கும்மிடிப்பூண்டி பஜார், ரெட்டம்பேடு சாலை, சரண்யா நகர் உட்பட்ட பல இடங்களில் கடந்த மூன்று நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து சாலையில் வெள்ளம் புரண்டோடுகிறது. கழிவுநீர் குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ள தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள நூற்றுக் கும் மேற்பட்ட கடைகள், ரெட்டம்பேடு சாலையில் நீதிமன்றம், அடுத்து பேரூ ராட்சி அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் உள்ளன. பேரூராட்சி முழுவ தும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முறையாக பராமரிக்கவில்லை. ஏற்கெ னவே பேரிடம் மேலாண்மை குழு, முன் கூட்டியே மழை நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மழைநீர் கால்வாய் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டுள் ளது. இதனால் தற்போது மழைநீர், சாலைகளை, வீடுகளை சூழ்ந்துள்ளது. இந்த மழைநீரை வெளி யேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி யுள்ளனர்.