அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், தீபாவளியையொட்டி ரேசன் கடைகளில் வெல்லம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவொற்றியூர் பகுதிக்குழு சார்பில் ஒப்பாரி போராட்டம் பகுதிச் செயலாளர் கஸ்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, நிர்வாகிகள் அலமேலு, புஷ்பா, அம்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.