districts

img

சிபிஎம் தலையீட்டால் ஜல்லி சாலை அமைப்பு

திருவண்ணாமலை,டிச.27- திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள கோழிப்புலியூர் ஊராட்சிமன்ற மாணிக்க மங்கலம் கிராமத்திலிருந்து ஏந்தல் செல்லும் சாலையை பல்லாண்டு கால மாக சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் கல்வி நிமித்த மாக மாணவர்களும் கடைகளுக்குச் செல்ல பொதுமக்களும் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வந்தது. அதன் விளைவாக, கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜல்லி சாலை மற்றும் தார்ச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர். கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மாணிக்கமங்கலம் கிராமத்திலிருந்து ஏந்தல் செல்லும் சாலையை ஜல்லி சாலையாக அமைத்துக் கொடுக்க  திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ. 17.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது பணிகளை துவக்கியுள்ளனர்.