districts

img

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்கிற பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த கோவிந்தன்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் இம்மானுவேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்கிற பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த கோவிந்தன், சுப்பராயலு ஆகியோர் உடலுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே . சாமுவேல்ராஜ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் , உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  ஏ.ஜி.சந்தானம் , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்  கன்னியப்பன் , அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்  அ.பத்மா , கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள்  கதிர்வேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.