districts

img

ஸ்டெம் செல் சிகிச்சை குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்

சென்னை.செப்,4- ஸ்டெம்செல் சிகிச்சை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.   சென்னை வடபழனியில் உள்ள  டாக்டர் காமராஜ் மருத்துவமனையில்  டாக்டர்.ராதாகிருஷ்ணன் இன்டர்நேஷனல் ஆர்த்தோ கேர் சென்டரும், அமெரிக்காவில் ஸ்டெம் செல் சிகிச்சை ஆராய்ச்சியில் புகழ் பெற்ற நிறுவனமான ஜியோ ஸ்டார் நிறு வனமும் இணைந்து ஸ்டெம் செல் சிகிச்சை முறையை தமிழகத்தில் முதல்முறையாக சென்னையில் அறிமுகம் செய்துள்ளன.திங்களன்று (செப்.4) இதன் துவக்க விழாவில் பேசிய அவர்,    மருத்துவ உலகில் நவீன கண்டுபிடிப்புகள் சாதாரண மக்களையும் எளிதில் சென்றடைய வேண்டும். புரட்சிகரமான சிகிச்சை யாக அறிமுகமாகும் ஸ்டெம் செல் தெரபி, குழந்தை இல்லாதவர்களுக்கும், மூட்டு வலி மற்றும் எலும்பு தொடர் பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்க ளுக்கும், இதய நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஸ்டெம் செல் தெரபி என்பது ரீ ஜெனரேடிவ் மருத்துவமாகும்.  நடுத்தர வயதில் மூட்டு தேய்மானம் அடைவது சகஜம். அதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இயல்பாக இயங்க வைக்க முடியும். இது மட்டுமல்லாமல் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை முறை பெரிதும் உதவும். எனவே ஸ்டெம் செல் கிசிச்சை முறையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். இதனைத்தொடர்ந்து ஸ்டெம் செல் சிகிச்சை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய 24 மணி நேர சேவைக்கான தொடர்பு எண்.98412 66666 அறிமுகம் செய்து வைத்தார். ஒரு வார காலம் அதாவது 10.09.2023 வரை  நடைபெறும் இலவச ஆலோசனை திட்டத்தையும் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குநர் டாக்டர் ஜெயராணி காமராஜ் வரவேற்றார். மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் டி.காமராஜ், ஜியோஸ்டார் யூ.எஸ்.ஏ. மைய மருத்துவ இயக்குனர் டாக்டர் திலிப்குமார் ஜியோஸ்டார் நிறுவனத்தின் சிறப்பம்சங்களை பட்டியலிட்டார். குறிப்பாக கோவிட் காலத்தில் இந்த நிறுவனம் ஒன்றுதான் ஸ்டெம் செல் தெரபியை பயன்படுத்தி அமெரிக்காவில் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க அனுமதி பெற்ற ஒரே நிறுவனம் என்றார். விழாவின் முடிவில் டாக்டர் நிவேதிதா காமராஜ் நன்றி கூறினார்.