ஊடகங்கள் வாயிலாக தொழிலாளர்களை அவதூறு செய்வதை கண்டித்தும், பணி மறுக்கப்படும் தொழிலாளிக்கு வருகை பதிவு வழங்க கோரியும், விடுப்பு குறித்த சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் பல்லவன் இல்லம் முன்பு வெள்ளியன்று (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் பொதுச் செயலாளர். வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.