அரசு போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும் செலவிற்க்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி, திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் அ.சேகர், கே.நாகராஜன், எஸ்.முரளி, பாலசுந்தரம், ஏஐடியுசி நிர்வாகிகள் ராஜேந்திரன், குப்புரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.