சென்னை, டிச.3- அரசுப் பள்ளி மாணவர்களின் கலை, பண்பாடு திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களிள் மொழித்திறன், ஓவியம், நடனம், நாட்டியம், இசை, வாய்ப்பாட்டு இசை உள்ளிட்ட 82 வகையான கலை திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளிகள் அளவில் இந்த போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து ஒன்றிய அளவில் சனிக்கிழமை வரையும் மாவட்ட அளவில் 4-ஆம் தேதி முதல் 9-ந்தேதி வரையும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. 3 நிலையில் நடத்தப்படுகின்ற போட்டியில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாகி வருகிற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகின்றன. 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இப்போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட கல்வி அதிகாரி மார்ஸ் கூறும்போது, அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர். இது போன்ற போட்டிகள் நடப்பது அரசு பள்ளி குழந் தைகளின் திறனை மேம்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பாகும். நாட்டுப்புற இசைக் கருவிகள், தமிழர்களின் கலை, பண்பாட் டினை அறிந்து கொள்ள முடிகிறது. சென்னை களில் 30 பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பங்கேற்று உள்ளனர் என்றார்.