மயிலாடுதுறை, ஜன.16- தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை யொட்டி உலகப் புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனிஷ்கோட் டையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் பாரம்பரிய மரபு சார் கலை நிகழ்ச்சிகள் கோட்டை வளா கத்தில் நடைபெற்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் மரபு சார் கலைநிகழ்ச்சி திங்க ளன்று துவங்கியது. கலை மாமணி சிவாஜிராவ் தலை மையிலான குழுவினரின் நையாண்டி மேளம், மயி லாட்டம் நாதஸ்வரம், காவடி யாட்டமும், ஆண்கள், பெண்கள் என இருபாலரின் பறையிசை நிகழ்ச்சி நடை பெற்றது. இதனை ஏராள மானோர் கண்டு ரசித்தனர்.
மூத்த குடிமக்கள் இல்லம்
சீர்காழி நகராட்சி செம் மங்குடி மூத்த குடிமக்கள் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. எஸ்ஆர்டி ஒருங்கிணைந்த மூத்த குடி மக்கள் இல்லம் மற்றும் சிக ரம் சமூக நல அறக்கட்டளை இணைந்து நடத்திய பாரம் பரிய சமத்துவ பொங்கல் விழாவில் சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ் வரி ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் நகர் மன்ற தலைவரும், காங்கி ரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கேபிஎஸ்எம் கனிவண்ணன், முதியோர் இல்ல காப்பாளர் எஸ்.சிவராமன், சிகரம் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜெ.சி. சா.பூவரசன், சிகரம் உறுப்பி னர்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர்.