சென்னை, ஏப். 3 - தமிழகத்தில் பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டு விட்ட தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாகனங்கள் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொரு த்தும் திட்டம் 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன டிப்படையில், 2019ம் ஆண்டுக்கு முன்பு தயாரித்த வாகனங்க ளுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்த அரசு 2021ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தப்புள்ளி வெளி யிட்டது. இதை எதிர்த்து ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குநர் செந்தாமரை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்த மேல்முறை யீடு மனுவை தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, அரசு தரப்பில் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதி கள் தள்ளுபடி செய்தனர்.