சென்னை, செப். 23 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சனிக்கிழமையன்று (செப்.23) திருவல்லிக் கேணியில் நடைபெற்றது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பை திரும்ப வழங்க வேண்டும், தொகுப் பூதியம், மதிப்பூதியம் பெறு வோருக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் சி.கலைச்செல்வி தலை மையில் நடைபெற்ற இந்தப் பேரவையை மாநிலச் செயலாளர் உ.சுமதி தொடங்கி வைத்தார். பொறுப்பு மாவட்டச் செயலாளர் த.முத்துகுமார சாமிவேல் வேலை அறிக் கையையும், பொருளாளர் பெ.ஜெயராமன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப் பித்தனர். சகோதர சங்கத் தலை வர்கள் வாழ்த்துரையுடன் நடைபெற்ற இந்த மாநாட்டை நிறைவு செய்து மாநிலத் தலைவர் மு.அன்ப ரசு பேசினார். இப்பேரவையில் மாவட்ட செயலாளராக த.முத்துகுமாரசாமிவேல் தேர்வு செய்யப்பட்டார்.