districts

ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை பெரியார் பல்கலை. பதிவாளர் கைது

சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் தற்போது பதிவாளராக உள்ள கோபி மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளது. இவர் மீது 2016 - 17 ம் ஆண்டு ஏழு ஆராய்ச்சி மாணவிகள் பேராசிரியர் கோபி தவறாக நடக்க முயன்றதாக, அப்போதய துணைவேந்தர் சாமிநாதனிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தி துணைவேந்தரிடம் விசாரணை அறிக்கையை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அப்போது பேராசிரியர் கோபிக்கு, பெயரளவிற்கு துறை ரீதியான தண்டனையாக மூன்று ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், இவர் முதல் மனைவி இருக்கும்போதே, இதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றும் ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் புகார் உள்ளது. இவர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார் குற்றச்சாட்டு எழுவது ஒரு புறம் என்றால், மறுபுறம் இவர் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளையும் இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து முன்வைத்து கடந்த மாதம் பல்கலை கழகத்தை முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது.

சேலம், ஜூலை. 26 – ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரி யராக கோபி பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பல்கலைக்கழக முழுநேர பொறுப்பு பதிவாளராகவும் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் மூன்று மாணவிகளுக்கு ஆராய்ச்சி வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்ப தால் மாணவி ஆய்வறிக் கையை சரி பார்ப்பதற் காக வருமாறு மாணவியை அழைத்துள்ளார். பல் கலைக்கழக வளாகத் தில் உள்ள தனது இல்லத் திற்கு வரவழைத் துள்ளார். ஞாயிறன்று நடை பெற்ற அரசு பணியாளர் தேர்வை எழுதிய ஒரு   மாணவி, மாலை 5  மணிக்கு தனது உறவினர்  ஒருவருடன் பதிவாளர் இல்லத்திற்கு சென்றுள் ளார். மாணவி ஆய்வ றிக்கை சரிபார்க்க பதிவா ளர் வீட்டிற்கு சென்ற நிலை யில், அவருடன் வந்த  உறவி னர் வெளியே சென்றுள் ளார்.

மாணவி தனியாக  இருந்தபோது, பதிவா ளர் கோபி மாணவியிடம் தவறாக நடக்கும் முயன் றதாக கூறப்படுகிறது. வெளியே வந்த மாணவி உள்ளே நடந்தது குறித்து தனது உறவினிடம் கூறி யுள்ளார். பின்னர் கருப்பூர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள் ளார். பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தன்னிடம் தவறாக நடந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் பல்கலைக்கழகதில் விசாரணை நடத்தினர். இந்த புகாரின் பேரில் பெண்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த கருப்பூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.  இதேபோன்று ஆராய்ச்சி மாணவியும், அவ ருடன் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்களும் தனது வீட்டிற்குள் புகுந்து தன்னை தாக்கியதாக கூறி, சேலம் தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.  மேலும், இது குறித்து  அவரும் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்தும் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் நடந்தவண்ணம் உள்ளது. தற்போது பதி வாளரே ஆராய்ச்சி மாண வியிடம் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.