3வது நாளாக இறங்குமுகத்தில் தங்கம் விலை
சென்னை, ஜூலை 25- சென்னையில் மூன்றா வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 3,160 குறைந் துள்ளது. அந்த வகையில் வியாழனன்று மட்டும் கிராமுக்கு ரூ.60 குறைந்து, சவரனுக்கு ரூ.480 ம் குறைந்து விற்பனையாகி வருகிறது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 430 ஆகவும், சவரன் ரூ.51 ஆயிரத்து 440 ஆகவும் விற்பனை செய்யப் படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 015-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்படு கிறது. வெள்ளி விலை ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.89-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ.89 ஆயிரத்துக்கும் விற்பனை யாகி வருகிறது.
தமிழகத்தில் வலுவாக கால்பதித்த யூனியன் பரஸ்பர நிதி திட்டம்
சென்னை,ஜூலை 25- பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியின் யூனியன் பரஸ்பர நிதி திட்டமானது தமிழகத்தில் வலுவாக கால் பதித்துள்ளது. ஆண்டு வளர்ச்சி விகிதம் 78 விழுக்காட்டை எட்டியுள்ளது. நாட்டில் பரஸ்பர நிதி திட்ட மதிப்பு கடந்த ஜூன் மாதம் முடிவடைந்த காலகட்டத்தில் 60 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளதார நாடாக இந்தியா உள்ளதால் பரஸ்பர நிதி திட்டங்களின் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்று யூனியன் பரஸ்பர நிதி நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் மதுக்குமார் நாயர் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாட்டில் பரஸ்பர நிதி வணிகத்துறை கடந்த பத்தாண்டுகளில் 6மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டு ரூ. 9.75 லட்சம் கோடியாக இருந்த இந்த துறையின் மதிப்பு தற்போது ரூ.61.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். யூனியன் வங்கிக்கு நாடு முழுவதிலும் வலுவான கிளைகள் இருப்பதால் பரஸ்பர நிதியின் புதிய திட்டங்களை எளிதாக விற்க முடிகிறது என்றும் யூனியன் வங்கி ஜப்பானின் தாய் இச்சி லைப் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை,ஜூலை 25- துபாயில் இருந்து சென்னை வந்த விமானத் தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டபோது அதில் தங்க நாணயத்தில் வெள்ளி மூலாம் பூசப்பட்டு கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து மொத்தம் 781 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும். சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய தங்கம், இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 5 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத் தக்கது.
தங்கம் கடத்தி வந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.