சென்னை,ஜன.4- பொங்கலையொட்டி வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து 6,182 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு கடந்த மாதம் 12ந்தேதி தொடங்கியது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரு கின்றனர். வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவில் புறப்பட்டு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் நிரம்பி விட்டன. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 நாட்களுக்கும் சேர்த்து 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சராசரி யாக ஒரு நாளுக்கு 50 ஆயிரம் பேர் வீதம் முன்பதிவு செய்தனர். பிற நகரங்களில் இருந்தும் அரசு விரைவு பேருந்துக ளுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.