சென்னை, அக். 9- நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள குப்பை தொட்டிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதவரம்-செங்குன்றம் பகுதிக் குழு சார்பில் கடப்பாரோடு மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய குடிநீர் இணைப்பு உள்ள வீடு களுக்கு புதிய இணைப்பு வழங்க ஆவணங் கள் கேட்டு அலைக்கழிக்க கூடாது, விடு பட்ட பகுதிகளில் உடனடியாக மழைநீர் வடி கால்வாய் அமைக்க வேண்டும், நீர் நிலை களுக்கு அருகில் உள்ள குப்பை தொட்டி களை அகற்ற வேண்டும், முறையாக தின சரி குடிநீர் வழங்க வேண்டும், சூரப்பட்டு சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், 31ஆவது வட்டத்தில் உதவிப் பொறியாளரை உடனடி யாக நியமனம் செய்ய வேண்டும், சேதமடைந்த உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வி.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவிக்குமார், பகுதிச் செயலாளர் வி.கமல நாதன், நிர்வாகிகள் என்.தேவராஜன், இளங்கோ, வி.பச்சையம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.