districts

img

பொது காப்பீடு ஊழியர் சங்க தலைவர் என். பாலகிருஷ்ணன் பணி நிறைவு பெற்றார்

சென்னை, செப். 5 - பொது காப்பீடு ஊழியர் சங்கத்தின் சென்னை மண்டல தலைவரான என்.  பாலகிருஷ்ணன் ஆக.31 அன்று, யுனைடெட் இந்தியா  இன்சூரன்ஸ் நிறுவனத்தி லிருந்து பணி நிறைவு பெற்றார். 30 வருடங்களாக இடது சாரி இயக்கங்களிலும், தொழிற்சங்கத்திலும் தீவிரமாக பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன், தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று தொழிலாளர்களை அணி திரட்டியவர். சென்னை  கலைக்குழுவில் நாடக கலைஞராகவும் உள்ளார். தமுஎகச மத்திய சென்னை மாவட்ட பொருளாளராக பங்காற்றி வருகிறார். அலுவலக பணி நிறை வையடுத்து செப்.2 அன்று என்.பாலகிருஷ்ணனுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலை வர் ஜி ஆனந்த், தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், வங்கி ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் சி.பி.கிருஷ்ணன், சென்னை கலை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரளயன், பொது பள்ளிக ளுக்கான மாநில மேடை யின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய  சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  தீக்கதிர் நாளிதழ், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்புகளுக்கு ரூ1.20 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.