காஞ்சிபுரம்,செப்.6- பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் பாதுகாப்பு மற்றும் எரிவாயு கசிவு சம்பவங்களை குறைக்க, இந்தியாவில் வீடுகளுக்கு நேரடியாக் குழாய் வழியாக எரிவாயு விநியோகம் செய்யும் ஏஜி அண்ட் பி பிரதம் நிறுவனம் அது குறித்த விழிப்புணர்வை அரசு அதிகாரி களுடன் இணைந்து காஞ்சிபுரம் பகுதியில் நடத்தியது. இந்த விழிப்புணர்வின் முக்கிய நோக்கம், சாலைகளை ‘தோண்டுவதற்கு முன் தொடர்பு கொள்ளுங்கள்’ என்பதை மக்களிடையே விழிப்புணர்வு எடுத்துச் செல்வதாகும். இதன் மூலம் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு எரிவாயு குழாய்களுக்கு மூன்றாம் தரப்பினரால் எந்தவித சேதமும் ஏற்படாமல் அதை தடுப்பதாகும் என்று அந்நிறுவனம் தெரி வித்துள்ளது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை, காஞ்சிபுரம் ஆர்டிஓ கே.பன்னீர்செல்வம், ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் செந்தில், ஜேசிபி ஆபரேட்டர் சங்கத் தலைவர் செல்வ மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.