விழுப்புரம்,டிச.22- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (டிச.22) செஞ்சியில் நடைபெற்றது. இதில் ஈ.வெ.ரா. மணியம் மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் நவம்பர் 2019 முதல் 2023 வரை பெறப்பட்ட மனுக்க ளில் 103 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்து டன் நிதி உதவியை சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினார். அதேபோல் அன்னை தெரசா ஆதரவற்ற பெண்க ளுக்கான திருமண நிதி யுதவி திட்டத்தில் 2019 முதல் 2023 வரைக்கும் பெறப்பட்ட விண்ணப்பங் களை 14 பெண்களுக்கும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ஜூலை 2020 முதல் நவம்பர் 2021 வரை பெறப்பட்ட மனுக்களில் 15 பெண்களுக்கு தாலிக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவிகளையும் வழங்கி னார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை வகித் தார். திண்டிவனம் சாராட்சியர் திவ்யான்ஷா நிகம், மாவட்ட சமூக நல அலுவலர் கு.ராஜம்மாள், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம். மொக் தியார் அலி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கள் ஆர்.விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன், ஆர்.அமுதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.