சென்னை, அக். 23- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னையில் ரூ.685 கோடி மதிப்பீட்டில் 28 வளர்ச்சிப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.12.68 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வரும் திருவிக நகர், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தையும், ரூ.12 கோடி செலவில் புரசைவாக்கம் சலவைக் கூடத்தை நவீனப்படுத்தும் பணிகளையும், ரூ.5.35 கோடி செல வில் திரு.வி.க. நகர் பேருந்து நிலை யத்தை மேம்படுத்தும் பணிகளையும், அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப் பட்டு, நடைபெற்று வரும் பணிகளை யும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2023 – 2024, 2024 - 2025 ஆகிய ஆண்டுகள் வடசென்னை திட்டம் மற்றும் ஒட்டுமொத்த சென்னை வளர்ச்சி திட்டம் என 140 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த 140 பணிகளில் பல்வேறு பணி களுக்கு அரசாணை பெறப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு, அந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல பணிகள் இன்றைக்கு கட்டுமானங்கள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் நிலையில் உள்ளது. குறிப்பாக வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மட்டும் 668 கோடி ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 28 பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பூங்கா மேம்பாடு, கடற்கரை மேம்பாடு மூன்று பணிகள், 3 ஏரிகள், 6 பேருந்து நிலையம், வீடமைப்பு திட்டம் வாழ்வில் குடியிருக்கும் மேம்பாடு திட்டம் 2, சந்தை மேம்பாடு, பள்ளி மேம்பாடு, விளையாட்டு அரங்கம், சமூக மேம்பாடு, ரத்த சுத்தி கரிப்பு மையம் என 28 பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டப்பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள மாதிரிகளை பார்வை யிட்டு, அதில் இருக்கும் சிறு சிறு குறை களை சரி செய்து முழு வீச்சில் அந்த பணிக்குண்டான அரசாணைகள் பெறப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் கோரப்பட்டு அந்த பணிகள் மேற்கொள்ளப்படும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தை மார்ச் 14ஆம் தேதி முதலமைச்சர் சென்னை தங்க சாலையில் தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் ரூ.4,228 கோடி ரூபாய் அளவில் தொடங்கப்பட்ட அந்த திட்டம், இன்றைக்கு ரூ.5,500 கோடி என்ற அளவிற்கு விரிவடைந்துள்ளது. இந்தத் திட்டப் பணிகளுக்கு ஒட்டு மொத்தமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தங்கள் பங்க ளிப்பாக துறை சார்பில் 685 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொண்டாலும் ரூ.1000 கோடி அளவிற்கு மற்ற பணிகள் மற்ற துறைகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அந்த நிதியை ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்தப் பணி கள் அனைத்தும் 1, 2, 3 என்று மூன்று பகுதிகளில் நிறைவேற்ற திட்ட மிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.