சென்னை, பிப். 21 - மாநகராட்சி தூய்மை, சுகாதாரம் மற்றும் சாலை பணியாளர்கள் உள்ளிட்டு 4ஆம் நிலை பணியாளர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் மூலம் முழு உடல் பரிசோதனை செய்யப் படும். இதற்காக ரூ8 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மேயர் ஆர்.பிரியா வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு: மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம் தாய்மார்களுக்கான ஒரு மகப்பேறு சிறப்பு அழைப்பு மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் 5 செவிலியர்கள் இருப்பார்கள். மகப்பேறு சிக்கல் உள்ள தாய்மார்களின் பட்டியலினை பெற்று வாரம் ஒருமுறை அவர்களை தொலை பேசி மூலம் அழைத்து நலன் விசாரித்து, மகப்பேறு சிக்கல் தொடர்பான அறிகுறி கள் இருப்பின் தகுந்த ஆலோசனைகளை அளிப்பார்கள். தாய்மார்களின் தேவை மற்றும் நோய் தீவிரத்தின் தன்மையை பொறுத்து மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மகப்பேறு மையங்களுக்கு தெரிவித்து உடனடி சிகிச்சை அளிக்கப்படும். இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 16 நகர சமுதாய சுகாதார நிலையங்கள், மூன்று 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனைகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்டினியூஸ் கார்டியோடோகி ராபி கருவி தலா 2 வழங்கப்படும். குழந்தை களின் வளர்ச்சியில் தாமதங்கள் இருக்கும் பட்சத்தில் உரிய சிகிச்சைகளை அளிக்க அனைத்து மண்டலங்களிலும் ஒரு இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் அமைக்கப்படும். இம்மை யங்களில் பேச்சு மற்றும் செவித்திறன் பயிற்சி போன்ற சேவைகள் அளிக்கப்படும். சுகாதார நிலையம் மேம்படுத்துதல் அடையாறு நகர்ப்புற சமூக சுகாதார மையம், சைதாப்பேட்டை அவசர சிகிச்சை மையம் ஆகியவை தலா 70 கூடுதல் படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தப் படும். இதற்காக தலா ரூ7 கோடி செலவிடப்படும். கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை கொண்டதாக மேம்படுத்தப்படும். இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் இடவசதி மற்றும் வழிகாட்டு நெறிமுறை களைக் கொண்டுள்ள மாட்டு உரிமை யாளர்களின் தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் படும். சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அடைத்து அபராதம் வசூலிக்க தென்சென் னையில் புதியதாக ஒரு மாட்டுத்தொழுவம் அமைக்கப்படும். தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதலாக இரண்டு நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்படும். ஸ்பான்ச் பார்க் மாத்தூர் எம்எம்டிஏ காலனியில் உள்ள குளத்தை பரிச்சார்த்த முறையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்பான்ச் பார்க்காக மாற்றப்படும். பூங்காக்களை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஸ்பான்ச் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மாநகரில் உள்ள ரூ.8 நீர்நிலைகளை 10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். சாலையோர பூங்கா மாத்தூர் எம்எம்டிஏ காலனி 2வது பிரதான சாலையில் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். மாநகரம் முழுவதும் 19 விளையாட்டுத் திடல்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள நாவலர் நகர் - லாக் நகர் (இரண்டு பக்கமும்), வாலாஜா சாலை - பாரதி சாலை, பாலாண்டி அம்மன் கோயில் தெரு, சிங்காரவேலர் பாலம் - கைலாசபுரம் பாலம். பக்கிங்காம் கால்வாய் தெரு முண்டகக்கண்ணியம்மன் பாலம். கனால் பேங்க் ரோடு மைலாப்பூர் பாலம் - மந்தைவெளி பாலம் (இரண்டு பக்கமும்) ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் சாலையோர பூங்காக்களை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படும், பாலங்கள் விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே சூளைமேடு, இந்திராகாந்தி 2வது தெரு பாலத்தை இடித்துவிட்டு ரூ2.32 கோடி மதிப்பீட்டிலும், கண்ணகி தெரு பாலத்தை இடித்துவிட்டு ரூ2.25 கோடி மதிப்பீட்டிலும் புதிய பாலம் அமைக்கப்படும். மயான பூமி களை ரூ10 கோடி செலவில் மேம்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.