திருவள்ளூர், மே 23- காட்டுப்பள்ளி எல்அண்டு டி மற்றும் எம்.எப்.எப் நிறுவனம் நுழைவாயிலில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் எல் அண்டு டி துறைமுகத்திற்கு இடம் கொடுத்த 1750 மீனவ குடும்ப இளைஞ ர்களுக்கு வேலை வழங்குவதாக அறிவித்து 250 பேருக்கு மட்டும் வேலை வழங்கியது. எல்அண்டு டி கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம், எம்.எப்.எப் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். வேலை வாய்ப்பில் மீதமுள்ள 1500 மீனவ இளைஞர்க ளுக்கு உடனடியாக வேலை வழங்கிடவும் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 250 தொழிலாளர்களை நிரந்தர பணியில் அமர்த்தவும், வலியுறுத்தி காட்டுப்பள்ளி எல்அன்ட் டி, எம்.எப்.எப் நிறுவன நுழைவு வாயிலில் பழவேற்காடு பகுதி மீனவ கூட்டமைப்பு சங்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் சென்னை மாவட்ட காவல் துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் அதையும் மீறி சாலையை மறித்து மீனவர்கள் தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி யும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக் கொண் டுள்ளனர்.