சென்னை, ஜூன் 6- சென்னையில், சர்வதேச பிளாஸ்டிக்ஸ் கண்காட்சி ஜூன் 10 முதல் 13 வரை நந் தம்பாக்கம் சர்வதேச வர்த்தக மையத்தில் நடை பெறவுள்ளது. தமிழ்நாடு பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) எற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியில் 350 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. ரூ. 500 கோடி அள விலான வர்த்தக வாய்ப்பு; 75 ஆயிரம் பார்வையாளர் கள் வருகை தரவுள்ளனர். வர்த்தகர்கள், தொழில் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி இலவசமாகும் பிளாஸ்டிக்ஸ் குறித்த தவறான எண்ணங்களை போக்கும் வகையில் “பிளாஸ்டிக்ஸ் உலகம் - சரியான பார்வை” என்ற தலைப்பில் சிறப்ப கருத் தரங்கமும் நடை பெறவுள் ளது. பிளாஸ்டிக்சை மறு சுழற்சி செய்யும் அரங்கு களில் அதற்குரிய தொழில் ்நுட்பமும், அதன் மூலம் இத்துறைக்குக் கிடைக்கும் வருவாய் வாய்ப்புகளும் அதில் விளக்கப்படும் என்று டாப்மா அமைப்பின் தலைவர் எஸ். ராக்கப்பன் தெரிவித்துள்ளார். இந்தக் கண்காட்சி மூலம் ரூ. 15,000 கோடி மதிப்பி லான 8 ஆயிரம் தமிழக பிளாஸ்டிக்ஸ் நிறுவனங்க ளுக்கு புதிய ஊக்கம் கிடைக் கும். இந்த நிறுவனங்கள் மூலம் தற்போது நேரடியாக 3 லட்சம் பேரும், மறை முகமாக 8 லட்சம் பேரும் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனார் என்றும் அவர் கூறினார்.
நேரடி செயல்விளக்கம்
பழைய பிளாஸ்டிக்ஸ் பொருள்கள் எவ்விதம் பிளாஸ்டிக்ஸ் ஜல்லிகளாக மாற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் வகை யில் கண்காட்சியில் நேரடி செயல்முறை மூலம் விளக் ்கிக் காண்பிக்கப்படும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் பிளாஸ்டிக்ஸ் துறையின் வளர்ச்சி, ஆண் டுக்கு 5 விழுக்காடு என்ற குறைவான அளவிலேயே உள்ளது.