கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப்போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு கிருஷ்ணகிரியில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஹ்மத்துல்லா,விசிக தலைவர் திராவிட ராசா,தமுமுக தலைவர் நூர் முகமது, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தங்கராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.