districts

சென்னை முக்கிய செய்திகள்

இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் 

சென்னை, நவ.12- பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொன்னேரி அரசு மீன்வளத்துறை கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மைய  தலைவர் மற்றும் முதன்மை  சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் நடை பெற்றது. இதில் மாணவர்களின் சட்டங்கள் குறித்தான கேள் விகளுக்கு வழக்கறிஞர்கள் பதில் கூறி எடுத்துரைத்த னர். மேலும் மாணவர் கள் இலவச சட்ட ஆலோச னைக்கு தொடர்பு கொண் டால் வழக்கறிஞர்களை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் என நீதிபதி கள் தெரிவித்தனர். இதில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர், முதன்மை சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் தேவேந்திரன் பார் அசோசியேஷன் செயலாளர் வெங்கடேலு, வழக்கறிஞர் ஸ்ரீதர் பாபு  மற்றும் கல்லூரி முதல்வர்  ஜேஜே.ஷகிலா, மாணவர் கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பழமையான மரம் விழுந்தது

பொன்னேரி, நவ.12- கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனத்த மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் பொன்னேரி அடுத்த தத்தை மஞ்சி கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் செல்வி  என்பவர் வீட்டில் சுமார் 30 ஆண்டு பழமையான மரம்,  வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. இதில் வீடு முழுவதும்  சேதமானது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து பொன்னேரி தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் தீயணைப்பு நிலைய  அலுவலர் சம்பத் தலைமையில் வந்த தீயணைப்பு படையி னர், 8 மணி நேரமாக மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். 

இடிமின்னலுக்கு  வீடு, மின்சாதன பொருட்கள் சேதம்

பண்ருட்டி, நவ. 12- பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதனால் புலவனூர் கிராமத்தில் முருகன் கோவில் தெருவில் உள்ள வீட்டின் மீது இடி தாக்கியது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இடி தாக்கியதில் வீடு சேதமடைந்தது. வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், மின் சாதனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும்  இருந்த தொலைக் காட்சி, மிக்சி, கிரைண்டர் ஆகியவை இடி தாக்கியதில் சேதமடைந்தது. கனமழை காரணமாக இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தனூர் அணையிலிருந்து  தண்ணீர் வெளியேற்றம்

ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 116.30 அடி அளவிற்கு அதாவது 6 ஆயிரத்து 722 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழையாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 240 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்பகுதியில் உள்ள 9 ஷட்டர்கள் வழியாக 3,440 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பென்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில்  விவசாயி பலி

சேத்துப்பட்டு, நவ. 12- விழுப்புரம் மாவட்டம் நந்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனி  (70). இவர் நந்தியவாடி கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். சேத்துப்பட்டு ஆரணி சாலையில் சனிக்கிழமை அதிகாலை  அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதில் பழனி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பழனி உடலைக் கைப்பற்றி பிரதேபரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை-கும்பகோணம் சாலையில் தேங்கும் மழைநீர்

கடலூர், நவ. 12- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு சாலையில் மண் குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மழை நீர் தேங்கி தெருக்களில் புகும் அபாயம் ஏற்பட்டது. மேலும் அவ்வப்போது நெடுஞ்சாலைகளில் விபத்தும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனை அகற்று வதற்கு பலமுறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி மற்றும் வட்டாட்சியரிடம் முறையிட்டும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் குடையுடன் சென்னை- கும்ப கோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி மற்றும் சோழத்தரம் காவல் துறையினர், nஜயங்கொண்டம் வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக மண் குவி யல்கள் அகற்றப்பட்டன. இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.