கடலூர் இருளக்குறிச்சி முகுந்த நல்லூர் பகுதி மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச மனை பட்டா அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கோ.பொன்னேரி, கோ ஆதனூர், புலியூர் ஆகிய மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் வட்ட செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன், நகர குழு உறுப்பினர்கள் பி.செந்தில், மார்க்கெட் சேகர், வி.வேல்முருகன், கே.கவிதா, கே.சாமிதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.