சென்னை, டிச. 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதி முன்னாள் செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் தென் சென்னை மாவட்டத் தலைவர் தோழர் பி.ஜீவா வெள்ளியன்று (டிச.22) காலமானார். அவருக்கு வயது 67. 1980களில் கிண்டி - பெருங்களத்தூர் வரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கி, கிண்டி, தாம்பரம் பகுதி தலைவராக செயல்பட்டார். தோல் பதனிடும் தொழிலாளியாக வேலை செய்து கொண்டே தொழிலாளர்களை சங்கமாக அணி திரட்டினார். பல்லாவரம் ஸ்டேஷன் ரோடு சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவராக செயல்பட்டு, பல்லாவரம் நகராட்சி நிரந்தர வாடகை கடைகள் கட்டி கொடுக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டார். பல்லாவரம் நகராட்சியில் 9வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்த அவர், கட்சியின் பல்லா வரம் பகுதிச் செயலாளராக 10 ஆண்டு கள் பணியாற்றினார். பல்லாவரம் கண்டோன்மென்ட் வாரச்சந்தை சிறு வியா பாரிகள் நலச் சங்கத்தின் முன்னணி தலை வராகவும் செயலாற்றி வந்தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் தென்சென்னை மாவட்ட தலைவராகவும் பணியாற்றி வந்தார். அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ஏ.பாக்கியம், எஸ்.குமார், கே.வனஜகுமாரி, ச.லெனின், சுந்தர், ஜி.செந்தில்குமார், ம.சித்ரகலா, எஸ்.கே.முருகேஷ், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.ெஜயசங்கரன், பி.ெஜயவேல், ஜி.விஜயலட்சுமி எம்.சி., இ.ரவி, எம்.ரெங்க சாமி, எஸ்.முகமது ரஃபி, என்.வெங்கடேசன், இ.மூர்த்தி, சி.செங்கல்வராயன், எம்.சரஸ்வதி எம்.சி., எஸ்.சரவண செல்வி, எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு, சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.தயாளன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்வு சனிக்கிழமை யன்று (டிச.23) மலங்கானந்தபுரம் எம்பிஏ சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டது.