சென்னை, ஜன.7 கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமை (ஜன.9) முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து பொது போக்கு வரத்து அன்று நிறுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் அன்று முழு வதும் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்க ளும் இயங்காது. அதேபோல சென்னை யில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப் பட்டுள்ளன. நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு ரயில்கள் வழக்கம்போல் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சேவையில் மாற்றம் இல்லை. பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ரயில் நிலை யங்களுக்கு சென்று பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரயில் சேவையை பொறுத் தவரை அத்தியாவசியமாக கருதப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக மின்சார ரயில் சேவை முழு வதுமாக ரத்து செய்யப்படவில்லை. 50 விழுக்காடு மின்சார ரயில்களை இயக்க சென்னை ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தனது டுவிட்டர் பதிவில், “ கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் மின்சார ரயில் சேவை 50 விழுக்காடு குறைக்கப்பட் டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
சென்னையில் 4 வழித்தடங்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பொது ஊரடங்கை யொட்டி 300 ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரயில் சேவை நடைபெறும். ரயில்களில் பயணம் செய்வ தற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட வில்லை. டிக்கெட் வழங்குவதில் எந்த நடை முறை மாற்றமும் செய்யப்படவில்லை. கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம்.