புதுச்சேரி, ஏப்.1- புதுச்சேரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் காங். வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிறன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வில்லியனூர் கிழக்கு மாட வீதி சந்திப்பில் பேச துவங்கியவர், பின்னர் மரப்பாலம் சிக்னல் சந்திப்பு அதனை தொடர்ந்து அண்ணாசிலை எதிரே அலை கடலென கூடியிருந்த மக்களிடத் தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார். தமிழகத்தின் சாதனைகளை பட்டியலிட்ட உதயநிதி,தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதனை தமிழக முதல்வர் பஸ் என பெண்கள் அழைப்பதாக தெரிவித் தார். தமிழகத்தின் நல்ல திட்டங்கள் புதுச்சேரிக்கு வர வேண்டும் என்றால், இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள். ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலை ஒன்றிய மோடி அரசு செய்துள்ளதாக மத்திய தணிக்கை குழு அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கை சமர்ப்பித்த அதிகாரிகளை மோடி அரசு பழிவாங்கும் நடவடிக் கையில் ஈடுபட்டது. இவர்களை தட்டி கேட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். பிரச்சாரத்தில் கூடியிருந்த மக்கள், எய்ம்ஸ் “செங்கல் எங்கே ...?” “செங்கல் எங்கே..?” எனக்கேட்டனர். இதற்கு உதயநிதி,இந்த விவகாரம் புதுச்சேரிக் கும் வந்து விட்டதா? என கூறி செங்கலை எடுத்து காட்டினார். எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும் வரை இந்த செங்கல்லை கொடுக்க மாட்டேன். பாஜக காரர்கள் இந்த கல்லை தேடி கொண்டு இருக் கிறார்கள் நீங்கள் கேட்டதால் காட்டினேன் என்றார். ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்காளர் கள் வாக்களிக்க செல்லும் வரை அவர்களோடு நமது செயல் வீரர்கள் நமக்கான வாக்கு என்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை அவர்க ளோடு நாம் பயணிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளையும் இந்தியா கூட்டணி கட்சியினரை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் ஆர்.சிவா மற்றும் காங்கி ரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் தலைவர் கள், நிர்வாகிகள், தொண்டர்கள்.