சென்னை, நவ.7- சர்வதேச அளவிலான மருத்துவ பட்டப்படிப்பை பெற ஆர்வமுள்ள மாண வர்களுக்கு உதவி செய்வ தற்காக கரீபியன் பகுதியை சேர்ந்த கிரெனடா தீவில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜார்ஜ் பல்கலைக் கழக மருத்துவத்துறை, இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள், 2023 ஆம் ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கவிருக்கும் பல் கலைக்கழக முதல் பருவத் திற்கான பட்டப்படிப்பின் மாணவர் சேர்க்கை குறித்து அறிந்து கொள்ளமுடியும். மாணவர்களின் வசதி மற்றும் தேவைக்கேற்ப 5 ஆண்டுகள் அல்லது 6 ஆண்டுகள் மருத்துவ பட்டப் படிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இதுதவிர, இளநிலை பட்டப்படிப்பை முடித்துள்ள மாணவர்கள், அமெரிக்கா அல்லது இங்கி லாந்து நாட்டில் மருத்து வராக பணியாற்ற தகுதி பெறக்கூடிய செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழ கத்தின் 4 ஆண்டுகால எம்.டி. பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை கழக தெற்கு ஆசிய மண்டல இயக்குநர் பாரத் காதியா, மாணவர் சேர்க்கை மேலாளர் சரத் சௌந்தர்ராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சென்னை நுங்கம்பாக் கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வரும் 18ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை மாணவர் பெற்றோர் சந்திப்பு நடை பெறவுள்ளது. இந்த சந்திப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் https://sgu.wufoo.com/forms/p1rbcopw0bsk4ew/ -ல் செய்து கொள்ளலாம் அல்லது கூடுதல் விவரங்க ளுக்கு +91 6383616166 என்ற கைப்பேசி அல்லது csoundar@sgu.edu என்ற மின்னஞ்சலில் திரு.சரத் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.