districts

img

உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு மருந்து உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் கோரிக்கை

மாமல்லபுரம், மே 22 - உயிர்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்ட மைப்பின் 13 வது மாநில மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில்  இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்ட மைப்பின் 13வது மாநில மாநாடு மே 21,22 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் எம்.பன்னீர்செல்வம், ஆர்.ரமேஷ், பி. சரவணன், கருணைகடல், சி.கோபி, வி.பாலாஜி  உள்ளிட்ட தமிழகத்தைச் சாரந்த பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகெண்டனர். மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜே.ராதாகிருஷ்ணன், திரைப்பட கலைஞர் எம்.இளவரசு, இன்டுஸ் பார்மா இயக்குநர் பி.ஜி.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  பேசினர். இம்மாநாட்டில் மருந்து உற்பத்தியின் மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்திட வேண்டும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு வழங்க வேண்டும், மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம்  தொடர்பாக எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பு கூட்டமைப்பின் கருத்துக்களை கேட்கவேண்டும் மருந்து விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு தனியாக மார்க்கெட்டிங் லைசென்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.