வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு சிபிஎம் சார்பில் கொளத்தூரில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தை சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் முடித்து வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, நிர்வாகிகள் கோடீஸ்வரன், மூர்த்தி, விஜயன், ஸ்டாலின், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.