districts

img

புற்றுநோயாளிகளுக்கு தலைமுடி தானம்

சென்னை, பிப்.4- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் தலைமுடியை இழந்த பெண்களுக்கு தலைமுடி தானத்தை க்ரீன் ட்ரெண்ட்ஸ் துவங்கியுள்ளது. உலக புற்றுநோய் தினத்தன்று சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திடம் 50 விக்குகளை அன்பளிப்பதாக அதுவழங்கியது. விரைவில் மேலும் 50 விக்குகளை வழங்க உள்ளது. கல்லூரி மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பட்ட பெண்களிடம் தானமாக பெறப்பட்ட தலைமுடியை கொண்டு இந்த விக் தயாரிக்கப்பட்டுள்ளது. நிறுவன சமூகப்பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்த விக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக  க்ரீன் ட்ரெண்ட்ஸ் சலூனின் தலைமை இயக்க அதிகாரி  தீபக் ப்ரவீன் கூறியுள்ளார். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு உயிர்வாழ்கின்ற, வசதி குறைவான நபர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கும் நோக்கோடு கடந்த 5 ஆண்டுகளாக இதை தாங்கள் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.