districts

img

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்   இலவசமாக வேட்டி-சேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அண்ணா நகர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.பச்சையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், சிபிஎம் நகர செயலாளர் வி.ஏழுமலை, சிஐடியு மாவட்டப் பொருளாளர் எ.வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.