சென்னை,நவ.24- 19 வயதிற்குட்பட்ட கால்பந்து போட்டியில் மதரசா பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை வரு வாய் மாவட்ட பள்ளி களுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்ட மாண வர்களுக்கு கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி விளையாட்டு மை தானத்தில் நடத்தப்பட்டது. இதில் 18 குறு வட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகள் இந்த சென்னை மாவட்ட வரு வாய் போட்டிகளில் கலந்து கொண்டன. விறு விறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அரசு மதரசா - ஐ - ஆசாம் மேல் நிலைப் பள்ளியை புனித கப்ரி யேல் மேல்நிலைப் பள்ளி எதிர்த்து களம் கண்டது. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சம நிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து பெனால்டிக் முறையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க நடத்தப்பட்டது. இதில் அரசு மதரசா - ஐ - ஆசாம் மேல்நிலைப் பள்ளி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெரம்பூர் டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜோசப் சான்று வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அரசு மதரசா - ஐ - ஆசாம் மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.சுந்தர வடிவேல், உடற்கல்வி ஆசிரியர் தேவி செல்வம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு வளர்செல்வம் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆசி ரியர்கள் கலந்து கொண்ட னர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக அரசு மதரசா மேல்நிலைப்பள்ளி டிசம்பரில் நாமக் கல்லில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.