சென்னை, நவ. 10- சென்னை வடபழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாநில கல்லூரி, நந்தனம், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேர் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்றும் புழு இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் வார்டனிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளுக்கும் என்னென்ன உணவு வழங்க வேண்டும் என்ற அட்ட வணை முறைப்படி உணவு வழங்கப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுதி மாணவர்கள் 70 பேர் இன்று காலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள நெற்குன்றம் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:- இந்த விடுதியில் மாணவர்களுக்கு அடிப்படையான வசதிகள் செய்து தரப்படவில்லை. மழைக்காலங்களில் தரைதளத்தில் தண்ணீர் தேங்கி வருகி றது. முறையான கண்காணிப்பு இல்லை. வழங்கப்படுகின்ற உணவில் தரம் இல்லை. இதுபற்றி பலமுறை விடுதி வார்டனிடம் தெரிவித்து உள் ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மாண வர்களை மிரட்டுகிறார்கள். மாணவர்க ளுக்கு தரமான உணவு உள்ளிட்ட அடிப்படையான வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாணவர்களின் போராட்டத் தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுப்ப தாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர் கள் கலைந்து சென்றனர்.