மதுரை,பிப்.9- மதுரை மாவட்டம் மேலூரில் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி யிருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக விடுதியில் குடிநீர் பிரச்சனை இருந்து வருவதாகவும் தரமற்ற உணவு வழங்குவதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனைத் தொடர்ந்து விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூ ரிக்கு முன்பாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே தகவல் இருந்து அங்கு வந்த மேலூர் டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபொனி மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி யளித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.