எலுமிச்சம்பழச்சாறு அருந்தியதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் 13 சிறு வர்களை ஞாயிறன்று (செப்-24) மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்க ளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்து வர்களிடம் கேட்டறிந்தார். சட்டமன்ற உறுப்பினர் கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.