திருவள்ளூர், ஏப்.9- திருவள்ளூர் மக்கள வைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திங்களன்று (ஏப் 8) பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு ஆகிய பகுதி களில் வாக்குகளை கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட னர். அப்போது திருவள்ளூர் மாவட்ட மீன்பிடி தொழிலா ளர்கள் (சிஐடியு), சங்கத் தின் தலைவர் ஜி.வினாயக மூர்த்தி, மாவட்டச் செய லாளர் டி.நித்தியானந்தம் ஆகியோர் வேட்பாளரிடம் மீனவர்கள் சார்பாக மனு அளித்தனர். பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அடங்கிய பழவேற்காடு பகுதியில் 50 கும் மேற்பட்ட கிராமங்கள் மீன் பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். மீனவர்களின் ஆதார மாக விளங்கும் பழவேற்காடு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும். அதானி துறைமுக விரிவாக் கத்தை தடுத்து நிறுத்த வேண்டும், அதானி திட்டத் தையே ரத்து செய்ய வேண்டும், ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் ஏவும்போது மீன வர்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்படுகிறது. இக்காலத்தில் நாள் ஒன்றுக்கு குடும்பத்திற்கு தலா ரூ.500 வழங்க வேண் டும் போன்ற கோரிக்கை களை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி னர். மீனவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேட்பாளர் சசிகாந்த் உறுதியாளித்தார். இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன், திமுக அவைத் தலைவர் பகலவன், பொன் னேரி நகர் மன்றத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், இ.தவமணி, டி.மதன், எல்ஐசி முகவர் கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.