districts

நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

விழுப்புரம், ஜூன் 26-

    மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவருடைய 2 மகன்களான குமரேசன் (23), சுமன் ராஜ் (20) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படகில் திங்களன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்க ளது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அதே பகுதியில் மீன்பிடித் துக் கொண்டிருந்த மீனவர் கள் உடனடியாக 3 பேரை யும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் மூர்த்தி பலியானார். 2 மகன்களும் உயிர் பிழைத்தனர்.