சென்னை,டிச.24- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் அத்தாரி என்ற பகுதியி லிருந்து ஓரியோ, ஆர்லி என்ற பயிற்சி பெற்ற, ஒரு வயதுடைய, இரண்டு மோப்ப நாய்கள் சென்னை விமான நிலைய சுங்கத் துறைக்கு வரவழைக்கப்பட்டன. அதில் ஓரியோ மோப்ப நாய் போதைப் பொருட்களை மோப்பம் பிடித்து சுங்கத்துறையினருக்கு அடையாளம் காட்டுகிறது. ஆர்லி என்ற மோப்ப நாய், வெடி பொருட்கள் போன்ற அபாயகர மானவைகளை கண்டுபிடித்து வருகிறது. மேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவிற்கு, ஒரு மோப்ப நாயை சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி பஞ்சாப் மாநில பயிற்சி நிலையத்திலிருந்து, 10 மாதங்கள் பயிற்சியை முடித்த இரினா என்ற ஒரு வயது நாய் குட்டியை சென்னை விமான நிலைய சுங்கத்துறை வரவழைத்து மோப்ப நாய் பிரிவில் சேர்த்துள்ளது. இந்த புதிய இரினா மோப்ப நாய் வரும் 2023 ஜனவரியிலிருந்து, சென்னை விமான நிலையத்தில் தனது பணியை தொடங்குகிறது. இந்த நாய் போதைப் பொருட்களை, துல்லியமாக கண்டுபிடித்து சுங்கத்துறையினருக்கு அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது.