districts

img

சிறைவாசிகளின் வாழ்வாதாரம் மேம்பட நிதியுதவி

வேலூர், டிச.27 - வேலூர் சிறையில் விடுதலையான சிறைவாசிகள் இடமிருந்து மனு மற்றும் நன்னடத்தை அலுவலர்களிடம் பரிந்துரை அறிக்கை பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 22 பேருக்கு ரூ.5.50 லட்சம் நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.  வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் அமைந்துள்ள முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் நடந்த இந்நிகழ்வில் சங்க துணைத் தலைவர் விஜயராகவலு, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) அப்துல் ரகுமான், வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் சங்கம் செயலாளர் ஜனார்த்தனன் உடனிருந்தனர்.