தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரசு கல்லூரியில் கள ஆய்வு
ராணிப்பேட்டை, ஆக. 27 – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வெள்ளியன்று (ஆக. 25) சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையில் நடைபெற்ற ஆய்வில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். திலகா மற்றும் ஹரி. கார்த்திக், ஆர். செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி பேராசிரியரை முதலில் சந்தித்து மாண வர்கள் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் குறித்து கேட்ட றிந்தனர். சோளிங்கர் காவல் ஆய்வாளர் பாரதி கூறுகை யில், அம்பேத்கர் படம் வைத்திருந்த காரணத்திற்காக மாணவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார். வீடியோ பதிவுகளை கொண்டு வழக்கு போடப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது கல்லூரியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிபடுத்தினார்.
விவசாயிகள் சாலைமறியல்
உத்திரமேரூர்,ஆக.27- உத்திரமேரூர் அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் காந்தி ருந்தனர். கொள்முதல் நிலையம் திறக்கப்படாத தால் கோபமடைந்த விவ சாயிகள் ஆலஞ்சேரி- நெல்வாய் கூட்ரோடு சாலை யில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விவ சாயிகளிடம் பேச்சு நடத்தி யதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
2ஆம் நிலை காவலர் தேர்வு கள்ளக்குறிச்சியில் இலவச பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் 26. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் இரண்டாம் நிலை காவலர்.சிறை காவலர். தீயணைப்பாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கள்ளக் குறிச்சியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் 3.359 பணி காலியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர்.சிறை காவலர். தீணைப்பாளர் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தகுதி உள்ள இளைஞர்கள் 17.9.23 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் இத் தேர்விற்கு தயராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 31.8.23 (வியாழக்கிழமை) முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக நூலக வசதியும்.இணையதள வசதியும்.மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக வகுப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது இப்பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித்தேர்வுளும் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 88072 04332 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ அல்லது கள்ளக்குறிச்சி 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு TNUSRB விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படம் ஆதார் நகலுடன் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 31. 8.23 அன்று முதல் பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.
புழல் சிறையில் வெளிநாட்டு கைதி தாக்கியதில் துணை ஜெயிலர் காயம்
சென்னை, ஆக. 27- சென்னை புழல் சிறையில் சனிக்கிழமை மாலை, துணை ஜெயிலர் சாந்தகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை அருகே சென்ற போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான இஜூபா அகஸ்தின் சிபுக்கி என்பவர் சாந்தகுமாரிடம், எங்களை ஏன் இந்த சிறை அறைக்கு மாற்றம் செய்தீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த கைதி, தான் வைத்திருந்த சாப்பாட்டு தட்டை சாந்தகுமார் மீது வீசியுள்ளார். இதில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறை அலுவலர்கள் அந்தக் கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியதோடு, அவர்களை தீவிரமாக கண்காணித்த வண்ணம் இருந்துள்ளனர். இதன் காரணமாக சிறை காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம், மோதல் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் வடசென்னை பேருந்து நிலையங்கள்
சென்னை, ஆக. 27- சென்னையில் 6 பேருந்து முனையங்க ளில் பயணிகளுக்கு அனைத்து வசதி களும் கிடைக்கும் வகையில் நவீன வசதி யுடன் மாற்றம் செய்ய சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) திட்ட மிட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அதனை போக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தில் கழிவறை முறையாக பரா மரிப்பதில்லை என்றும் பயணிகளுக்கு தேவையான எந்த வசதியும் இல்லை என்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், திரு.வி.க நகர் பேருந்து நிலையத்துடன் சேர்த்து வட சென்னையில் இருக்கும் மேலும் 5 பேருந்து நிலையங்களை நவீனமயமாக்க சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. அதன்படி, தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 5 பேருந்து நிலையங்களை சீரமைத்து பயணிகளுக்கு தேவையான வசதி களை செய்து கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அழுக்கான கழிவறைகள், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை, சிசிடிவி கேமராக்கள் இல்லை போன்ற புகார்கள் கிடைத்ததை அடுத்து, அதற்கான பணிகளை இந்த 6 பேருந்து நிலையங்களில் செய்ய சிஎம்டிஏ ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நவீன மேற்பரப்பு, சோலார் பேனல்கள், சுத்தமான ஓய்வு அறைகள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதி, காத்திருப்பு அறைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் கடைகள் என அனைத்து பயணிகளுக்குமான வசதி களும் இருக்கும் என்று சிஎம்டிஏ தெரி வித்துள்ளது. திரு.வி.க நகர் மற்றும் அம்பத்தூர் பேருந்து நிலையங்களில் பணிகளை தொடங்க ஏற்கனவே டெண்டர் கோரப் பட்டுள்ளது. 6 பேருந்து நிலையங்களையும் 50 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடி வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பேருந்து முனையத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடக் கலை ஞர்களை கொண்டு வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பேருந்து நிலையங்கள் மேம்பாடுத்தப்பட்டு வருகின்றன. பூங்காக்கள், கடற்கரை, திடக்கழிவு மேலாண்மை, பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.