districts

img

தொடர் மழை: 1000 ஏக்கர் மணிலா பாதிப்பு

சிதம்பரம், ஜன. 8- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலூர்  மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், சிதம்பரம் கிழக்கு பகுதியில் உள்ள கிள்ளை,  தெற்கு பிச்சாவரம், பொன்னந்திட்டு, தாண்டவராயன் சோழம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயி கள் பயிரிட்டுள்ள மணிலா பயிர் 1000  ஏக்கருக்கு தண்ணீர் அழுகி வீணாகி  உள்ளது. மணிலா பயிரிடும் விவசாயிகள் கண்ணன், சாமிதுரை, நடராஜன், ரமேஷ், சொக்கலிங்கம், பாக்கிய ராஜ், அருள் உள்ளிட்ட 20-க்கும்  மேற்பட்ட விவசாயிகள் வயலுக்குச் சென்று மணிலா பயிர்களை பார்த்து  மிகவும் வேதனை அடைந்தனர்.  இதுகுறித்து கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்க தலைவர் கண்ணன் கூறுகையில்,“ மணிலா பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ. 48 ஆயிரம் செலவு செய்திருக்கிறோம். கடந்த டிசம்பர் மாதத்தில் 17 செ. மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால், மணிலா பயிர்கள் அனைத்தும் வீணாகியது.   கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை என்பதால், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மணிலா  சாகுபடி முழுமையாக அழித்து விட்டு  மீண்டும் இந்த மாதத்தில் மணிலா பயிரை விதைத்தோம். திடீர் மழை யால் தண்ணீர் தேங்கியதால் 90 விழுக்காடு வரைக்கும் வேர்கள் அழுகிவிட்டது. இதனால் மணிலா  விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் மட்டும் 1000 ஏக்கருக்கு மேல் பாதித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் முழுமை யாக கணக்கெடுத்து விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் உதவிகள் செய்ய வேண்டும்” என்றார். பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் நந்தினி கூறுகை யில், “மணிலா பயிர் பாதிப்பு குறித்து  விவசாயிகள் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து, நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். ஆங்காங்கே தண்ணீர் நிற்கிறது விவசாயிகளுக்கு தண்ணீர் வடிய வைப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கியிருக்கிறோம்  இன்னும் ஒரு  வாரம் கழித்து தான் பயிரின் தன்மை குறித்து கூற முடியும்”என்றார்.