உளுந்தூர்பேட்டை, ஜன 19 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மதியனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் உள்ள பயிர்கள் சேதப்படுத்தப்படுவதால் விவ சாயிகள் வேதனையில் வாடி வரு கின்றனர். வனத்துறையினர் காட்டுப் பன்றிகளை பிடித்து பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திரு நாவலூர் ஒன்றியத்தை சேர்ந்த மதியனூர், பச்சை வெளி, பு.மாம்பாக்கம், இலுப்பையூர், ஆரிநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல், சர்க்கரைவள்ளி கிழங்கு, உளுந்து, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்துள்ள னர். தற்போது அறுவடை காலம் நெருங்கும் நிலையில் இப்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் தங்களின் மகசூல் அழிந்து வருவதை கண்டு விவசாயிகள் வேதனையில் வாடி வருகின்றனர். இது தொடர்பாக மதியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.குடியரசு மணி என்ற விவசாயி, “எங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கி இருக்கும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் எங்கள் நிலத்தில் புகுந்து பயிர்களை கடுமை யாக சேதப்படுத்தி அழித்து வரு கின்றன. மேலும் வரப்புகளையும் சேதப்படுத்தியதால் விவசாயிக ளுக்கு மேலும் துயரம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறையினர் மூலம் காட்டு பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் பல நூறு ஏக்கரில் பயி ரிடப்பட்டுள்ள பல்வேறு பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் அவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார் “காட்டுப்பன்றிகளை பிடிக்கும் நட வடிக்கைகளை உடனடியாக வனத்துறையினர் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக இப்பணி நடைபெற வேண்டும். அறுவடை காலத்தில் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறையினர் பார்வையிட்டு உரிய பரிந்துரையை வனத்துறைக்கு அளித்து நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.