மதுராந்தகம், ஜூலை 29- அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி வழங்கக் கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுராந்தகத்தில் வெள்ளியன்று (ஜூலை 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட எண்டத்தூர், வைப்பனைபுதூர், தண்டலம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் நிலத்தை செப்பனிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் கிணறு அமைத்து, மின் இணைப்பு பெற்று விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு என காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் அரசு நிலங்களில் விவசா யம் செய்ய கூடாது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து விவசாயிகளை விவசா யம் செய்திடக் கூடாது என்று வெளியேற் றும் அறிவிப்பை ரத்து செய்திட வேண்டும், உழுபவனுக்கே நிலம் என்ற வகையில் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மதுராந்தகம் வட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், முன்னாள் மாநில செயலாளர் டி.கிருஷ்ணராஜ், மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், மாவட்டச் செய லாளர் கே.வாசுதேவன்,மாவட்டத் துணைத் தலைவர் ஜி.மோகனன், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எம்.எஸ்.அர்ஜூன்குமார், வட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம், கிளை செயலாளர்கள் சேகர், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஊர்வ லமாகச் சென்று மதுராந்தகம் வட்டாட்சியரி டம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.