திருவண்ணாமலை,அக்.14- திருவண்ணாமலை மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள மின்மாற்றி பழுதாகி ஒரு வார காலத்திற்கு மேலாகி யும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிராம மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு கிராம விவ சாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரஜினி ஏழு மலை, ஒன்றியச் செயலாளர் லட்சுமணன், ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், நிர்வாகி சாமி கண்ணு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.