districts

img

வெள்ள நிவாரணம் கேட்டு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

கடலூர்,டிச.2- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டு விவசாய சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுத்தனர். தொடர் மழையால் சேதமடைந்த வீடுகளை, பொருட்களை, தண்ணீர் சூழ்ந்த வீடுகளை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். சேதமடைந்த நிலங்களை சீர்படுத்தி கொடுக்க வேண்டும். முழுமையாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெல், உளுந்து, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு 30 ஆயிரம் நட்டஈடு வழங்க வேண்டும். தண்ணீர் மூழ்கி சுவர் இடிந்து உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண வேண்டும். கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் தென்பெண்ணை ஆற்றில் சேதமடைந்த தளவானூர், எனதிரிமங்கலம் தடுப்பணையை கட்டி கொடுக்க வேண்டும்.  கெடிலம் தென்பெண்ணை ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும், அருவா மூக்கு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம், மாவட்டச் செயலாளர் கோ.மதவன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம், விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் சரவணன், ஜெகதீசன், தென்னரசு, வெங்கடேசன், லோகநாதன், குமரகுருபரன், முருகன், ராமானுஜம், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மனுக்களை விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் அளித்தனர். காட்டுமன்னார்குடி காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கததின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.  மூர்த்தி, ஜாகிர் உசேன், வெற்றிவீரன், bஜயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பங்கேற்றனர். கடந்த 15 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், மலர் செடிகள், சவுக்கு உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், தண்ணீர் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், சுவர் இடிந்து விழுந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.