விழுப்புரம்,ஜூலை 20-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள ராஜஸ்ரீ தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை (ஜூலை 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
மாநில துணைத் தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் டி. சுரேஷ் குமார், பொருளாளர் இ.விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், மாவட்டத் தலைவர் ஆர். தாண்டவராயன், மாவட்டத் துணைத் தலைவர் கோ. மாதவன், செஞ்சி வட்டச் செயலாளர் வி.சிவன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார்.