districts

img

சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு கேட்டு கோட்டை முன்பு போராட்ட விவசாயிகள் முடிவு

திருவள்ளூர், செப் 23- திண்டிவனம் முதல் நகிரி வரை ரயில் பாதை யால் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்காவிடில், சென்னை கோட்டை முன்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராசன் எச்சரிக்கை விடுத்தார். திண்டிவனம் முதல் நகிரி வரை ரயில் பாதை திட்டத்தால் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மரம், செடி, வீடு, கட்டிடம், பைப்லைனிங் ஆகிய வற்றிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (செப்.22), திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராசன் பேசுகையில், விளை நிலங்களை இழக்க கூடிய விவசாயிகளுக்கு 2013 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் மறு குடியமர்வு சட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்காக கடந்த மார்ச் 29ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினோம். 6 மாத கால மாகியும் மாவட்ட நிர்வாக  மும்,  தமிழ்நாடு அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க  வில்லை. இதனால் இந்த திட்டத்தில் பாதிக்கும் விவ சாயிகள் மீண்டும் போராட வேண்டியிருக்கிறது. அரசாங்கம் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் தொழிற்பேட்டை,  ஜவுளி பூங்கா என புதிய திட்டங் கள் கொண்டு வருவ தற்கும்,  நான்கு வழிசாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழி சாலை, ரயில் பாதை அமைக்க இப்படி நிலங்களை எடுக்கும்போது நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தருவதில்லை.  இதனால் விவசாயிகளின்  வாழ்வாதாரம் பாதிக்கிறது. அரசு திட்டங்களுக்கு நிலத்தை எடுக்கும்போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தர வேண்டும். 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் இதற்கான வழி வகை உள்ளது. திண்டிவனம் முதல்  நகரி வரை கொண்டுவரப்படும் ரயில் பாதை திட்டத்தை  எதிர்க்கவில்லை.  

விவசாயி கள் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் உரிய இழப்பீட்டு அரசு வழங்க மாவட்ட ஆட்சி யருக்கு அதிகாரம் உள்ளது. 10 மடங்கு வரை உயர்த்தி இழப்பீடு  வழங்கலாம்.  ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப் பேட்டை,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிக ளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையென்றால் பாதிக்கப்படும் மாவட்டங் களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் சென்னை கோட்டை முன்பு போராட்டம் நடை பெறும்.  இழப்பீடு பெற்று தரும் வரை தமிழ்நாடு விவ சாய சங்கம் துணை நிற்கும் என்றார். ஆர்ப்பாட்டத் திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். இந்தபோராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.பெருமாள் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட துணை நிர்வாகி கள் எஸ்.ஜெயச்சந்திரன், டி.எஸ்.ஏழுமலை ஆகி யோர் பேசினர்.