districts

img

மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணியை துரிதப்படுத்திடுக

மதுராந்தசுகம், பிப்.21- மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணியை துரிதப்படுத்தி  பாசனத்திற்கு நீரைத் தேக்கி வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம்,  சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நீண்டகாலமாக தூர் வாரப்படாமல், வண்டல் மண் படிந்து தூர்ந்து போனதால் தண்ணீரை தேக்கும் அளவு  குறைந்துள்ளது. ஏரியை தூர் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகளும், பொது மக்களும்  கோரிக்கை விடுத்தனர். மேலும் விவசாயிகள் சங்கம், சிஐடியு மற்றும் பலவேறு அமைப்பு களின் சார்பில் 2019ம் ஆண்டு ஊர்வலம் நடத்தி பொதுப்பணித்துறை மற்றும் கோட்டாட்சியரிடம் மனுகொடுத்து முறையிட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை 2020ம் ஆண்டு ரூ120 கோடி  நிதி ஒதுக்கி தூர் வாரும் பணிகளை துவங்கியது. தமிழ்நாடு அரசு  ஏரியின் கட்டுமானப் பணிகளில் சிறப்பு  கவனம் செலுத்தி தூர்வாரும் பணிகளை  விரைவாகவும் தரமாகவும் செய்யவலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணரஜ், மாவட்ட செயலாளர் வி.அரிகிருஷ்ணன், வட்டத் தலைவர் எம்.ஜெகன்நாதன், வட்ட செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்ட  செயலாளர் எஸ்.ராஜா, ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் எம்.ரமேஷ் உள்ளிட்ட  பலர் பேசினர். முன்னதாக மதுராந்தகம் காந்தி சிலை அருகில் இருந்து ஊர்வலமாகச்  சென்று பொதுப்பணித்துறை செயற்பொறி யாளரிடம் கோரிக்கை மனுக்களை சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர். ஆட்சியர் ஆய்வு இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், ஏரியில் நடை பெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.